முன்னாடி வீட்டுல உட்காந்து டீவில பாத்தேன். ஆனா இப்போ ? – பெங்களூரு அணி குறித்து ஹசரங்கா

Hasaranga
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய 14வது ஐபிஎல் தொடரானது முதற்கட்ட போட்டிகள் சிறப்பாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் துவங்கிய போது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை இந்த ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என பிசிசிஐ விரைவான திட்டத்தினை தீட்டி அதனை முறைப்படி வடிமைத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடர் மீண்டும் துவங்க உள்ள நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், பின் ஆலன் ஆகியோர் இந்த சீசனில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்த ஆர்.சி.பி நிர்வாகம் 3 வீரர்களை தேர்வு செய்து உள்ளது. அதில் அண்மையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஜாம்பாவிற்கு பதிலாக தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில்தான் பெங்களூர் அணிக்காக தேர்வானதை மகிழ்ச்சியுடன் அறிவித்த ஹசரங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியின் உடை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் “நான் வீட்டில் அமர்ந்து டிவியின் முன் ஆர்சிபி அணி விளையாடியதைப் பார்த்து வந்தேன்”, “தற்போது அந்த அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாகவும், வியப்பாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement