இந்த தொடரில் மாஸ் காட்டப்போவது இவர்தான். பொளந்து கட்ட போகிறார் – ஹர்ஷா போக்ளே கணிப்பு

Bhogle
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி துவங்குகிறது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக மிகவும் ஆக்ரோஷமான அணி என்று எடுத்துக்கொண்டால் அது கொல்கத்தா அணி தான் . கம்பிரின் தலைமையில் 2 கோப்பைகளை வென்ற அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல கடுமையாக உழைத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என கொல்கத்தா அணி பல மாற்றத்தை செய்துள்ளது.

கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் இந்த வருட ஏலத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் எடுத்திருக்கிறது. அவரை 5.25 கோடி கொல்கத்தா அணி எடுத்துள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இவர் தான் பிரம்மாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்த போவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

ஆம் சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் 17 சிக்ஸர்களை விளாசிய அவர், நேற்று முன்தினம் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார் . அற்புதமான ஃபார்மில் இருக்கும் இவர் கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று தெரிகிறது.

Advertisement