PAK vs RSA : வாய்ப்புக்காக வெளியில் காத்திருப்பது கடினம் – ஆட்டநாயகன் ஹாரிஸ்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Sohail
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

pak vs rsa

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

azam

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஹாரிஸ் சோஹைல் கூறியதாவது : வாய்ப்புக்காக வெளியில் அமர்ந்து காத்திருந்து நமது வாய்ப்பு வரும்வரை பொறுத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. என்னுடைய இன்றைய வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய அந்த வாய்ப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றுதான் நினைத்தேன். நான் உள்ளே நுழைந்தபோது பாபர் அசாமிடம் கூறிக் கொண்டே இருந்தேன் ஆனால் அங்கு சென்றதும் அது எளிதானது அல்ல என்று தெரிந்து இருந்தாலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று ஹாரிஸ் சோஹைல் கூறினார்.

Advertisement