நான் பவுலிங் போடும்போது என் பேச்சை கேளு. அந்த பேச்சை இல்ல – ரோஹித்தை திட்டிய பாண்டியா

Hardik Pandya and Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது; முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணியானது நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித்தை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆபாசமாக திட்டியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவு ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கேப்டன் ரோகித் சர்மா ஹார்டிக் பாண்டியா பந்து வீசும் போது பீல்டர்களை மாற்றி அமைத்துள்ளார். அதனால் சற்று அதிருப்தி அடைந்த ஹர்திக் பாண்டியா பீல்டரை நோக்கி நான் பவுலிங் செய்யும்போது என் பேச்சை கேளுங்கள். ரோகித் பேச்சை கேட்காதீர்கள் என தகாத வார்த்தையில் திட்டி உள்ளார்.

அப்படி அவர் திட்டும் அந்த சில பதிவுகள் தற்போது ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஹார்டிக் பாண்டியாவின் இந்த செயலுக்காக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு இந்திய அணியின் சீனியர் வீரரும், தற்போதைய கேப்டனுமான ரோகித்தை மைதானத்தில் வைத்து ஒரு இளம் வீரர் இவ்வாறு ஆபாச வார்த்தைகளில் திட்டுவது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்று கூறிவருகின்றனர்.

- Advertisement -

மேலும் ஹார்டிக் பாண்டியாவின் இந்த செயலை கண்டித்து சமூகவலைதளத்தில் #HardikAbusedRohit என்ற ஹாஷ் டேக் மூலம் இந்த தகவலை அதிகளவு வைரலாக்கி வருகின்றனர். மேலும் பாண்டியாவின் இந்த செயல் குறித்த வீடியோ தற்போது அதிகளவில் பரவி வருவதால் அவர் மீது அதிக அளவில் கண்டனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தது.

இதையும் படிங்க : IND vs ENG : கங்குலி, சேவாக்கையே தண்டிச்சீங்க – விராட், ரோஹித்தை மட்டும் ஏன் சும்மா விடறீங்க

மேலும் ஏற்கனவே சிலமுறை தனது ஒழுக்கமற்ற செயல்களால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள பாண்டியா மீண்டும் இம்முறை அணியின் கேப்டன் என்று கூட பாராமல் அவரை ஆபாச வார்த்தையில் வசை பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ரோஹித்தை திட்டிய பாண்டியாவினை ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக கண்டித்து வருகின்றனர்.

Advertisement