MS Dhoni : என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் குறித்து தோனி கூறியது இதுதான் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மும்பை அணியின் ஆல்ரவுண்டரான

Hardik
- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மும்பை அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா. மும்பை அணி 17 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்த போது இறுதியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். இதில் 3 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

Pandya

- Advertisement -

இந்த போட்டியில் பாண்டியா தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அடித்தார். ஏற்கனவே சென்னை அணிக்கு எதிராக தோனி கண் முன்பே அந்த ஷாட்டை பாண்டியா அடித்தார். அந்த போட்டி முடிந்ததும் ஹார்டிக் பாண்டியா ஓய்வறையில் சென்று தோனியை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் தோனி ஹார்டிக் பாண்டியாவின் ஹெலிகாப்டர் ஷாட் குறித்து பேசியதை தற்போது பாண்டியா கூறியுள்ளார்.

அதன்படி பாண்டியா கூறியதாவது : போட்டி முடிந்ததும் நான் சென்னை அணியின் ஓய்வறைக்கு சென்றேன் அப்போது தோனியை பார்த்து என்னுடைய ஷாட் எப்படி என்று கேட்டேன். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே சரியாக ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்கிறாய் மேலும், என்னுடைய பலத்தை விட அதிகமாக நீ விளையாடுகிறாய் என்று நான் மகிழும்படி பேசினார் தோனி என்று பாண்டியா தெரிவித்தார்.

Hardik-Pandya

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

Rahane 1

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

Pandya

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement