CSK vs MI : சென்னையை வீழ்த்திய பிறகு தோனி குறித்து ட்வீட் செய்த – ஹார்டிக் பாண்டியா

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டி முடிந்தவுடன் சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து மும்பை அணியின் வீரரான பாண்டியா ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அந்த டீவீட்டில் என்னுடைய இன்ஸ்பிரேசன், என்னுடைய சகோதரர், என்னுடைய நண்பர் மற்றும் லெஜண்ட் என அனைத்துமே நீங்கதான் தோனி என்று ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

அணிகள் மாறி இருந்தாலும் தோனி மற்றும் பாண்டியாவுக்கு இடையேயான இந்த உறவு ரசிகர்களால் பெருமளவு கவரப்பட்டு இணையத்தில் இந்த பதிவு அதிக அளவில் பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement