MI vs RCB : இவர்களின் அடித்தளமே வெற்றிக்கு வழிவகுத்தது – பாண்டியா பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமை

Pandya
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 40 ரன்களும், கடைசி நேரத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பாண்டியா கூறுகையில் : எங்களது அணியின் ஒப்பனர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்களின் சிறந்த அடித்தளமே எங்களது வெற்றியை எளிமையாக்கியது. மேலும், முதல் 6 ஓவர்களில் அவர்கள் பெங்களூரு அணியை அருமையாக ஆடினார்கள். பெங்களூரு அணியின் இந்த பலவீனமான பந்துவீச்சே அவர்களின் தோல்விக்கு காரணம் என்று நான் நினைக்கிறன்.

Moeen ali

மேலும், அவர்கள் அணியில் ஏபிடி மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற ஆசைப்படுகிறோம். தற்போது சொந்த மண்ணில் இருந்து மீண்டும் வெற்றி கணக்கை துவங்கி இருக்கிறோம் என்று பாண்டியா கூறினார்.

Advertisement