இந்திய அணிக்கு திரும்புவது குறித்து என்ன நெனைக்குறீங்க? – அதிரடியான பதிலை அளித்த ஹர்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா முதுகு பகுதியில் செய்து கொண்ட பகுதி அறுவை சிகிச்சை காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்ததால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஆனால் சமீப காலமாகவே அவர் தனது தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தற்போது மீண்டும் பந்துவீசும் திறனை பெற்றுள்ளார். மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை பெரிய விலை கொடுத்து குஜராத் அணி நேரடியாக வாங்கியது மட்டுமின்றி அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமித்தது.

Hardik Pandya

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று விதத்திலும் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவரின் தலைமையில் 7 போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் குஜராத் அணி 2-வது இடமும் பெற்றுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இறங்கி அதிரடி காட்டும் பாண்டியா ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்களை வீசி அதில் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

அதோடு பீல்டிங்கில் எப்போதும் போலவே சிறப்பாக செயல்படும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் மதிப்புமிக்க ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார். ஏற்கனவே இந்திய அணியில் அவரால் பந்து வீச முடியவில்லை என்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதால் இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்புவதே நோக்கம் என்று கடின உழைப்பினை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு தான் திரும்புவது குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா கூறுகையில் :

Pandya

என்னுடைய தற்போதைய மனநிலையில் நான் இந்திய அணிக்கு திரும்புவதை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். எனவே இந்த தொடரின் மீது மட்டும்தான் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். தற்போதைக்கு நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் இதில் மட்டும் தான் எனது கவனம் உள்ளது. இதன் பிறகு வேண்டுமென்றால் இந்திய அணியில் விளையாடுவது குறித்து கவனத்தைச் செலுத்துவேன்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரை நான் சிறப்பாக முடிக்கும் பட்சத்தில் எனக்கு மீண்டும் தன்னம்பிக்கை கிடைக்கும். இந்த தொடரில் இதுவரை நான் செயல்பட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாண்டியா தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : குஜராத் அணியின் கேப்டனாக செயல்படுவது என்னை இன்னும் பொறுப்பான வீரராக மாற்றியுள்ளது. அதே போன்று ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு அனைத்து விதமான செயல்பாட்டினையும் வெளிப்படுத்த மிகவும் விருப்பம்.

இதையும் படிங்க : ஏதோ திறமை இருக்கும் போல! கலாய்த்த ரசிகர்களையே பாராட்ட வைத்த இளம் வீரர், புதிய வரலாற்று சாதனை

அந்த வகையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இதுவரை நான் பல போட்டிகளில் விளையாடி உள்ளேன் அந்த அனுபவமும் எனக்கு இந்த ஐபிஎல் தொடரில் உதவுகிறது. தற்போதைக்கு எனது கவனம் எல்லாம் இந்த ஐபிஎல் தொடரின் மீது மட்டும்தான் என்று ஹர்டிக் பண்டியா அதிரடியான பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement