சோதனை மேல் சோதனை.. ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவதில் மீண்டும் – ஏற்பட்டுள்ள சிக்கல்

Pandya
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 9 லீக் சுற்று போட்டிகளில் விளையாட அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள முதல் ஐந்து போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்திலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று பேசப்பட்டது. ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்ட பாண்டியா அந்த போட்டியின் எஞ்சிய இன்னிங்ஸ்ஸில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அடுத்ததாக நியூஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. மேலும் பெங்களூரு சென்ற அவர் அங்கு சிகிச்சையை மேற்கொண்ட வேளையில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்ட வேளையில் நேற்று வெளியான அறிக்கையின் படி இங்கிலாந்து மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் விளையாடப்பட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கட்டாயம் அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பாண்டியா கம்பேக் கொடுத்து விடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின்படி :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதனால் அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியையும் தவறவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாட வைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நிச்சயம் இரண்டு-மூன்று போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வேற லெவல்ப்பா.. அதை எடுக்கவே எனக்கு 40 பந்து வேணும்.. மேக்ஸ்வெலுக்கு கவாஸ்கர் ஆச்சர்ய பாராட்டு

இதன் காரணமாக பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் இன்னும் 2-3 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணி தங்களது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கெதிராக நவம்பர் 12-ஆம் தேதி விளையாட இருக்கிறது. அதற்கு முன்னர் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதனால் ஹார்டிக் பாண்டியா இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் நேரடியாக நாக் அவுட் சுற்று போட்டிகளுக்காக தயார் ஆவார் என்றும் ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement