மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹார்டிக் பாண்டியா விளையாடுவதில் சந்தேகம் – என்ன ஆனது அவருக்கு ?

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

- Advertisement -

அப்படி ஒருவேளை ஹார்டிக் பாண்டியா இந்த போட்டியில் விளையாடாமல் போனால் அவருக்கு பதிலாக ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்படுவார். அதனால் நிச்சயம் எப்படியும் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாண்டியாவுக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கு தற்போது பரவலாக இருந்து வருகிறது.

இரண்டாவது போட்டியை நீங்கள் கவனித்திருந்தால் உங்களுக்கு அது புரிந்திருக்கும். ஏற்கனவே முதுகு பகுதி பகுதியில் ஆபரேஷன் செய்துகொண்ட ஹார்டிக் பாண்டியா பந்து வீசாமல் இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பந்து வீசினால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற சூழல் உருவானதால் தற்போது மெல்ல மெல்ல பந்து வீசி வருகிறார்.

pandya 1

இதன் காரணமாக தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் பந்துவீசி வரும் அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்து வீச மிகவும் சிரமப்பட்டார். மேலும் முதுகு பகுதியில் வலி இருப்பதை உணர்ந்த அவர் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். மேலும் அவரால் தொடர்ந்து பந்துகளை வீச முடியவில்லை, அதே போன்று பேட்டிங்கிலும் சற்று சிரமப் பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் இன்றைய போட்டியில் அவர் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே விளையாடுவார் என்றும் அப்படி இல்லை என்றால் அவர் இந்த போட்டியில் விளையாடாமல் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

Advertisement