தென்னாபிரிக்க தொடரில் விளையாடனுனா பாண்டியா இதை செய்தே ஆகனும் – பி.சி.சி.ஐ அனுப்பிய மெசேஜ்

Pandya-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு பந்து வீசாமல் இருந்து வருகிறார். ஐ.பி.எல் மட்டுமின்றி இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடிய பல தொடர்களிலும் அவர் முழுநேர பேட்ஸ்மேனாகவே மட்டுமே விளையாடி வந்தார்.

pandya 3

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் போது நிச்சயம் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா பந்து வீசாமல் இருந்தது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி வருவதால் இனி பாண்டியா அணிக்கு திரும்புவது கடினம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹார்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் எனில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல வேண்டுமென பிசிசிஐ- யிடமிருந்து ஒரு மெசேஜ் அவருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pandya 3

அதன்படி ஹார்டிக் பாண்டியா சமீப காலமாகவே அடிக்கடி காயமடைந்து வருவதாலும், பந்து வீசாமல் இருந்து வருவதாலும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தங்கி தனது முழு உடற்தகுதியையும் நிரூபித்து காண்பிக்க வேண்டும். அப்படி உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் தொடாத உச்சத்தை தொட்ட ரோஹித் – உண்மையிலே இவர் ஹிட்மேன் தான்

தற்போதுள்ள நிலையில் பாண்டியா டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவிற்கு தகுதி பெறமாட்டார் என்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement