IND vs AUS : முதலாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமா அவர் விளையாடமாட்டாரு – உறுதிசெய்த பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

indvsaus

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதால் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தவிர்த்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கேப்டன் ஹார்டிக் பாண்டியா இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வீரர்கள் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

shreyas iyer

அதில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதை உறுதி செய்த ஹர்டிக் பாண்டியா மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முதலாவது போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதுகு வலி காரணமாக முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்யாத ஷ்ரேயாஸ் ஐயர் எஞ்சியுள்ள ஆட்டத்திலிருந்து விலகியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை இன்னும் விளையாடும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்பதனால் அவர் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று ஹார்டிக் பாண்டியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இன்னைக்கு நம்ம டீமோட ஓப்பனர்ஸ் இவங்கதான். போட்டிக்கு முன்னரே – கன்பார்ம் செய்த கேப்டன் பாண்டியா

ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் அணிக்கு திரும்பும் அளவிற்கு உடற்தகுதியை பெறவில்லை. நிச்சயம் அவர் விரைவில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புவதாக ஹார்டிக் பாண்டியா கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல்வேறு தொடர்களை தவறவிட்ட அவர் மீண்டும் அதே காயத்தினால் தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement