2024 டி20 உ.கோ இந்தியா ஜெயிக்க வாய்ப்பில்ல.. அந்த 2 பேர் ஆடுனா கொஞ்சம் யோசிக்கலாம்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 7
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பையை முதலும் கடைசியுமாக எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா வென்றது.

அதன் பின் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்திய அணிக்கு நிறைய தரமான வீரர்கள் கிடைத்து வருகின்றனர். ஆனால் அவர்களை வைத்துக்கொண்டு கடந்த 17 வருடமாக டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

2 முக்கிய வீரர்கள்:
அந்த தோல்விக்கு சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒருவேளை இந்தியா உலகக் கோப்பை வெல்ல வேண்டுமெனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபண்ட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ஆனால் முதன்மை ஆல் ரவுண்டரான பாண்டியா தற்போது தடுமாறுவதால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா உலகக் கோப்பை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா தேவை. இந்தியாவின் வெற்றிக்கு அவர் நன்றாக விளையாடுவது அவசியமாகிறது”

- Advertisement -

“சில வாரங்களில் இந்தியா அவரைப் பற்றிய தன்னம்பிக்கையில் புதிய உத்தத்தை பெற வேண்டும். ஏனெனில் அபாரமாக விளையாடக்கூடிய ஹர்திக் பாண்டியா இருப்பது இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடாமல் போனால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: முதல்ல ஆர்சிபி சட்டையை கழற்றுங்க.. ஏபி டீ வில்லியர்ஸ்’க்கு.. ஸ்காட் ஸ்டைரிஸ் விட்ட சிஎஸ்கே சவால்

“இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல ரிஷப் பண்ட் விளையாட வேண்டும். குறிப்பாக காயத்தை சந்திப்பதற்கு முன்பு எப்படி விளையாடினாரோ அதே போன்ற ஆட்டத்தை அவர் தற்போது விளையாட வேண்டும். அதே போலவே ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவும் அசத்துவது இந்தியாவின் வெற்றிக்கு அவசியம்” என்று கூறினார். இருப்பினும் ரிஷப் பண்டு தற்போது ஓரளவு நன்றாக விளையாடும் நிலையில் பாண்டியா திணறலாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement