இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்காக ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீரர்கள் அவ்வப்போது விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இப்போது சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் விளம்பர படத்தை பற்றிய பதிவினை போட்டுள்ளார்.
மேலும், அதில் என்ன சிறப்பம்சம் என்றால் இந்த விளம்பரத்தினை பற்றி ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் சென்னை அணியுடனான நட்பினை குறித்து பதிந்துள்ளார். இதோ அந்த ட்வீட் :
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
@chennaipipl நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே செம பீலிங் வித் மச்சான் @msdhoni மாப்ள @ImRaina #thala #chinnathala #WhistlePoduArmy pic.twitter.com/L9z8C7tYux— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 17, 2019
ஹர்பஜன் இதுபோன்று தமிழில் ட்வீட் செய்வது ஒன்றும் புதிதல்ல. இந்த ஐ.பி.எல். தொடர் முடியும்வரை ஹர்பஜன் தமிழ் ட்வீட் செய்து கலங்கடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.