Harbhajan Singh : இதயம் நொறுங்கிவிட்டது. தோல்வியை ஏற்க முடியவில்லை – சி.எஸ்.கே வீரர்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

CSKShop
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Pollard 1

நேற்றைய போட்டி முடிந்தவுடன் மும்பை அணி உடனான போட்டி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஹர்பஜன். இந்த ட்வீட் ரசிகர்களின் மனதையும் நெகிழவைக்கும் விதமாக சோகத்துடன் தனது வருத்தத்தோடு ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

இந்த ட்வீட்டில் ஹர்பஜன் குறிப்பிட்டதாவது : என் இதயம் நொறுங்கி விட்டது இந்த முடிவினை நான் எதிர்பார்க்கவில்லை இதைத் தவிர வேறு எதுவும் பேசவும் எனக்கு தெரியவில்லை. அனைவரும் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தொடர் முழுவதும் எனக்கு சிறப்பான ஆதரவை நீங்கள் தந்தீர்கள். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள், இன்னும் என்னால் போட்டியில் எந்த இடத்தில் தோற்றோம் என்று நம்ப முடியவில்லை என்ற ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்

Advertisement