IPL 2023 : இந்தமுறை சென்னை அணிக்காக அவர் விளையாடுவதை பாக்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

மார்ச் 31-ஆம் தேதி இன்று துவங்கியுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 28-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு நடைபெற இருப்பதினால் கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் தற்போது ஐபிஎல் தொடரின் மீது குவிந்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனின் முதலாவது போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சிஎஸ்கே அணியும் தற்போது அகமதாபாத் மைதானத்தில் மோதி வருகின்றன.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ஒரு சில வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் வேளையில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை காண ஆவலாக காத்திருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த சீசனில் நான் பார்க்க ஆசைப்படும் ஒரு வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான். ஏனெனில் இந்த முறை அவர் சிஎஸ்கே அணிக்காக எப்படி அவரது பங்களிப்பை வழங்கப் போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Jadeja

ஏனெனில் எப்பொழுதுமே பேட்டிங்கில் கொஞ்சம் கீழே இறக்கப்படும் ஜடேஜா இம்முறை சென்னை அணிக்காக அதிரடியாக விளையாடுவதற்காக சற்று முன்கூட்டியே இறக்கப்படலாம். அதுமட்டும் இன்றி நான்கு ஓவர்களும் அவர் முழுவதுமாக பந்து வீசுவார். எனவே இம்முறை சிஎஸ்கே அணிக்காக ஒரு ஆல்ரவுண்டராக அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை காண ஆவலாக உள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ஹார்டிக் பாண்டியா பண்ற தப்பு அந்த அணிக்கு தோல்வியை கொடுக்கலாம் – ஏ.பி.டி கருத்து

தற்போதைய சூழ்நிலையில் அவரை விட ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் யாரும் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கூட அவர் அபாரமாக விளையாடியிருந்ததால் சென்னை அணிக்காக அவர் விளையாடப்போகும் ஆட்டத்தை நான் ரசித்து காண இருக்கிறேன் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement