கோலி, ரோஹித்தை அங்க போக சொல்ற நீங்க 664 ரன்ஸ் விளாசிய கருண் நாயரை ஏன் எடுக்கல.. ஹர்பஜன் விளாசல்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட கருண் நாயர் போராடி வருகிறார். 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்து சாதனை படைத்த அவர் 6 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். அப்போதிலிருந்து கடினமாக போராடி வரும் அவர் தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் 6 இன்னிங்ஸில் 664 ரன்கள் குவித்து அட்டகாசமாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் சுமாராக விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மாவை ரஞ்சிக் கோப்பைக்கு செல்லுமாறு அனைவரும் சொல்வதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் அசத்தும் நாயரை மீண்டும் தேர்ந்தெடுக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பரிதாப நாயர்:

“அவருடைய புள்ளிவிவரங்களை நான் பார்க்கிறேன். 2024/25இல் 6 இன்னிங்ஸில் 664 ரன்கள் குவித்துள்ள அவர் 5 முறை அவுட்டாகவில்லை. 664 என்பது அவருடைய சராசரி. 120 என்பது ஸ்ட்ரைக் ரேட். அப்படிப்பட்ட அவரை நீங்கள் எடுக்காதது அநியாயம். இங்கே பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓரிரு போட்டிகளில் அசத்துவதால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் பல போட்டிகளில் அசத்தும் அவரை ஏன் எடுக்கவில்லை?”

“வித்தியாசமான நபர்களுக்கு வித்தியாசமான விதிமுறைகளா? சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மாவை ரஞ்சிக்கோப்பை விளையாடுமாறு சொல்கிறீர்கள். ஆனால் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? இந்த வீரர்கள் எப்போது தான் விளையாடுவார்கள். முச்சதம் அடித்த பின்பும் எப்படி அவர் நீக்கப்பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

- Advertisement -

ஹர்பஜன் கேள்வி:

“அவரைப் போன்ற வீரரை பற்றி யாரும் பேசாதது எனக்கு வலியை கொடுக்கிறது. இந்திய அணியுடன் அவர் இங்கிலாந்துக்கு சென்ற போதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5வது போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து சில வீரர்கள் சென்றார்கள். குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக ஹனுமா விகாரி விளையாடினார். இதற்கான காரணம் என்ன என்று என்னிடம் சொல்லுங்கள்”

இதையும் படிங்க: விராட் பாய் தான் அதை தாமாக கொடுத்தாரு.. இந்தியாவை ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றியது பற்றி ஆகாஷ் தீப்

“சுமாராக விளையாடிய வீரர்கள் மீண்டும் ரன்கள் அடிக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? அவர் கைகளில் டாட்டூ போட்டுக் கொள்ளவில்லை, விலை உயர்வுள்ள உடைகளை அணியவில்லை. அதனால் தான் அவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வில்லையா? உங்களுக்கு அவர் கடினமாக உழைப்பது தெரியவில்லையா” என்று கூறினார்.

Advertisement