ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது என்று அறிவித்ததில் இருந்து தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் ஒரே கலவரமாக இருக்கிறது. முதலில் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு மட்டும் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதில் ரவிந்திர ஜடேஜா ஹர்பஜன் சிங் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை.
சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா, தீபக் சாகர், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் தனி தனியாக விமானத்தில் வைக்கப்பட்டு துபாய் அனுப்பப்பட்டனர். இதில் சி.எஸ்.கே அணியுடன் முன்னணி வீரர் ஜடேஜா வந்து இணைந்து கொண்டார். ஆனால், ஹர்பஜன்சிங் வரவில்லை.
அதன் பின்னர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் திடீரென கொரோனா வைரஸ் தொற்று புகுந்தது தீபக் சஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் உட்பட பதிமூன்று பேருக்கு இந்த வைரஸ் தொற்று உருவாகியது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னா திடீரென அணி நிர்வாகத்துடன் சிறிய சண்டை போட்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இந்தியாவிற்கு திரும்பி விட்டார்.
அதற்காக அவர் தற்போது பல காரணங்களை கூறி வருகிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமிற்கு வந்து சேரவில்லை. மேலும் அவர் தற்போது இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக சி.எஸ்.கே அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Dear Friends
I will not be playing IPL this year due to personal reasons.These are difficult times and I would expect some privacy as I spend time with my family. @ChennaiIPL CSK management has been extremely supportive and I wish them a great IPL
Stay safe and Jai Hind— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2020
இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து ட்விட்டரில் ஒரு தெளிவான விளக்கத்தை ஹர்பஜன் சிங் கொடுத்துள்ளார். அதில் : அன்பு நண்பர்களே தனிப்பட்ட காரணங்களால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் விளையாடப் போவது இல்லை இது கடினமான நேரம் என்பதால் நான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். மேலும் நான் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எனக்கு மிகுந்த ஆதரவளிக்கிறது. சென்னை அணிக்கு இது ஒரு சிறந்த போட்டியாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று அவர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.