அவர் விஷயத்துல தப்பு கணக்கு போடாதீங்க.. பலத்தை ஃபாலோ பண்ணுங்க.. இந்திய அணியை எச்சரித்த ஹர்பஜன்

harbhajan singh
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்சூரியன் நகரில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதற்காக களமிறங்க உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் அதில் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் எச்சரிக்கை:
அது போன்ற சூழ்நிலையில் அஸ்வினை விட சற்று பேட்ட்டிங்கில் அதிகமாக ரன்கள் சேர்க்கக்கூடிய ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் ரவிச்சந்திரன் அஷ்வினை கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் இப்போட்டியில் மீண்டும் அதை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்தது பின்வருமாறு.

- Advertisement -

“அங்கு சூழ்நிலைகள் வெப்பமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். பிட்ச் கடினமாக காணப்படும் என்பதால் பவுன்ஸ் இருக்கும். எனவே 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களை இந்தியா களமிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா தங்களுடைய சொந்த மண்ணில் தங்களின் பலமான வேகத்தை பயன்படுத்த முயற்சிக்கும். எனவே இந்தியா தங்களுடைய பலத்தை (சுழல்) பின்பற்ற வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? அதில் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? விவரம் இதோ

“குறிப்பாக அஸ்வின் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அது நடப்பது போல் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். சுப்மன் கில் 3வது இடத்திலும் 4வது இடத்தில் விராட் கோலியும் இருப்பார்கள். 5, 6வது இடங்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலை சேரும். 7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்ற சூழ்நிலையில் 8வது இடத்தில் தான் கேள்வி எழுகிறது. ஆனால் அங்கே நான் தாக்கூருக்கு பதிலாக அஸ்வின் விளையாட விரும்புகிறேன். 9, 10, 11 ஆகிய இடங்களில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement