விராட் கோலியின் வருகையால் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இடத்தை இழக்கப்போவது – யார் தெரியுமா?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி வரும் 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்க உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த டெஸ்ட் தொடரானது சமநிலையில் உள்ளது. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

kohli

- Advertisement -

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் தலைமையில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் காரணமாக மூன்றாவது முக்கியமான போட்டியில் விராட் கோலி பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மூன்றாவது போட்டிக்கான அணியில் இருந்து ஒருவர் வெளியேறியாக வேண்டும். அப்படி விராட் கோலியின் வருகையால் வாய்ப்பை இழக்க போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

கடந்த பல தொடர்களாகவே புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்கள் இருவரில் ஒருவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக விராட் கோலியை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால் இரண்டாவது போட்டி முடிந்து பேட்டியளித்த கேப்டன் ராகுலும் சரி, பயிற்சியாளர் டிராவிடும் சரி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் என்றும் அனுபவ வீரர்கள் என்பதன் காரணமாக அவர்கள் நிச்சயம் தொடர்ந்து போட்டியில் பங்கேற்பார்கள் என்று உறுதி அளித்துள்ளனர்.

Vihari

இதன் காரணமாக ரகானே, புஜாரா ஆகியோர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் கடந்த போட்டியின் போது விராத் கோலிக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த விஹாரி மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இளம் வீரரான விஹாரி இதுவரை தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஓமைக்ரான் பரவலால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் நடைபெறுமா? – பி.சி.சி.ஐ வைத்திருக்கும் பிளான் பி (என்ன தெரியுமா?)

அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் தற்போது அவர் கட்டாயமாக வெளியேற்றப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறப்பான வீரராக இருந்தும் தனது திறமையை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement