தனது டீமுக்காக ஒருத்தர் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா? ரசிகர்களை நெகிழவைத்த – ஹனுமா விஹாரி

Hanuma-Vihari
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரானது இந்த ஆண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரும், ஆந்திர பிரதேஷ் அணியின் கேப்டனமான ஹானுமா விகாரி செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

மேலும் அவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹனுமா விஹாரி செய்த செயல் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காண உள்ளோம்.

- Advertisement -

அதன்படி ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய ஆந்திரபிரதேச அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி இடது கையில் அடிபட்டு காயத்துடன் வெளியேறினார்.

பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும் ஆந்திர பிரதேஷ் அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது உடைந்த அதே கையுடன் மைதானத்திற்குள் வந்த விகாரி இடது கையால் பேட்டிங் செய்தது மட்டுமின்றி ஒரே கையால் பவுலர்களை தைரியமாக எதிர்கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : பெவிலியனுக்கு போன வீரரை வம்பிழுத்து வசமாக சிக்கிய சாம் கரன் – தண்டனை கொடுத்த ஐ.சி.சி

தனது அணிக்காக அவர் கேப்டனாக செய்த இந்த அர்ப்பணிப்பு கிரிக்கெட்டின் மீது உள்ள அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக இருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஹனுமா விஹாரியை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement