சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பரவத் துவங்கிய முதல் நாளிலிருந்தே விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களான ஐபிஎல் மற்றும் உலக கோப்பை ஆகியவை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும் பரவிய இந்த வைரஸ் அந்நாட்டின் முன்னாள் வீரர் ஒருவரை பலிவாங்கியது. அதனைத் தொடர்ந்து அந்த அணியின் முன்னணி வீரரான அப்ரிடிக்கும் சென்ற வாரம் கொரோனா உறுதியானது. அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் அணியில் மேலும் மூன்று வீரர்களுக்கு கொரோனா தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணியை முன்கூட்டியே தயார்செய்து கொரோனா பரிசோதனை செய்த பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரியம் இந்த பரிசோதனையின்போது 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதை உறுதி செய்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் வீரர்களான ஹைதர் அலி, சதாப் கான், ஹரிஸ் ராப் போன்ற மூன்று வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான முதற்கட்ட மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அது மட்டுமின்றி இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தொடர்ந்து இரு முறை பரிசோதனை நடைபெறும் என்றும் அந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்து செல்வார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான வீரர்களின் உடல் தகுதி குறித்த அறிக்கையின்படி 35 வீரர்களுக்கு நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பேருக்கு ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நட்சத்திர வீரர்களான முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ், பகார் ஜமான் ஆகிய ஏழு பேருக்கு தோற்று உறுதியாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
After Tested positive COVID-19 acc to PCB testing Report yesterday,as 2nd opinion & for satisfaction I personally went to Test it again along with my family and here I along with my all family members are reported Negetive Alham du Lillah. May Allah keep us all safe 🤲🏼 pic.twitter.com/3WKOkXisdp
— Mohammad Hafeez (@MHafeez22) June 24, 2020
இந்நிலையில் தனக்கு கொரொனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஹபீஸ் தற்போது தானாக முன்வந்து தனது குடும்பத்துடன் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார் அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை மேலும் தனது குடும்பத்தாருக்கும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை அவர் தனது டுவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார் மேலும் கடவுளுக்கு நன்றி நாங்கள் அனைவரும் நலம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.