சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் ஆகாது – விராட் கோலியை ஆதரவுடன் விமர்சிக்கும் ஜாம்பவான் கேப்டன்

Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை அடிக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019இல் சதமடித்திருந்தார்.

IND vs ENG Reece Toply Virat Kohli

- Advertisement -

அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் உட்பட முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களின் அறிவுறுத்தலை ஏற்காத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து தொடர்ச்சியாக விளையாடி வரும் போதிலும் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எட்ட முடியவில்லை.

ஆனால் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாத அவர் ஐபிஎல் முடிந்ததும் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்து தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வெறும் 6 போட்டியில் பங்கேற்று விட்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் மீண்டும் மொத்தமாக ஓய்வெடுக்க உள்ளார்.

Kapildev

கபில் தேவின் விமர்சனம்:
முன்னதாக பெரிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று கடுமையாக விமர்சித்த முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி போன்ற பெரிய வீரரை நீக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர் மிகப்பெரிய வீரர். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஓய்வு கொடுக்கப் பட்டதாக நீங்கள் கூறியிருந்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் அவரைப்போன்ற வீரரை எப்படி பார்முக்கு திரும்ப வைக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகும்”

kapildev

“தனித்துவம் நிறைந்த வீரரான அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து அதிக போட்டிகளில் விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் சரியாக செயல்படவில்லையெனில் தேர்வுக் குழுவினர் அவர்களின் முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

இவ்வளவு நாட்களா:
விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கூறும் கபில் தேவ் அவரைப் போன்ற மிகச்சிறந்த வீரர் பார்முக்கு திரும்ப இத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வது ஆச்சரியமாக உள்ளதாக கூறுகிறார். ஏனெனில் மிகச் சிறந்த வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப இத்தனை காலங்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 – 6 வருடங்களில் விராட் கோலி இல்லாமல் இந்தியா விளையாடவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவரைப் போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரை நீக்கினாலும் ஓய்வு கொடுத்தாலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது”

Kohli-2

“அதற்காக ரஞ்சி கோப்பை அல்லது வேறு ஏதேனும் தொடர்களில் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பது போன்ற வழிகளை அவர்தான் கண்டறிய வேண்டும். அது அவரின் தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும். மேலும் சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் அதுதான் வித்தியாசமாகும். மிகச்சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இத்தனை நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் அவர் ஃபார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் எடுத்துகொள்வது கவனிக்க வேண்டியுள்ளது”

இதையும் படிங்க : கடந்த ஆண்டு நடந்த இந்த ஏமாற்றத்தால் ரோஹித் அமைதியா உட்காந்துட்டாரு – ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்

“விராட் கோலி ஓய்வெடுத்தாலும் நீக்கப்பட்டாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. அவர் பார்ப்புக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அவரைப் போன்ற நல்ல வீரர் ஃபார்முக்கு திரும்ப ஒரு சிறந்த இன்னிங்ஸ் போதுமானது. இருப்பினும் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்காக நாம் 2 வருடங்களாக காத்திருக்கிறோம்” என்று ஆதரவு கலந்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement