ஷ்ரேயஸ் அய்யரை கேப்டனாக போட சொன்ன கம்பீருக்கு வந்த சோதனை..! போட்டியில் கழட்டிவிட்ட ஷ்ரேயஸ் !

gambir
- Advertisement -

நேற்று நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையான ஐபில் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த போட்டியில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக தனக்கு கேப்டன் பதவி கொடுத்து அழகு பார்த்த தனது குருவையே ஒப்புக்கு சப்பாணி ஆக்கி ஆட்டத்தை வேடிக்கை பார்க்க வைத்துள்ளார் டெல்லி அணியின் புதிய கேப்டன்.

gautham gambir

- Advertisement -

நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இதுநாள் வரை டெல்லி அணியின் கேப்டனாக இருந்த கெளதம் கம்பிர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்த கம்பிர் டெல்லி அணியின் தொடர் தோல்வி காரணமாக தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதுடம் இந்த தொடரில் தமக்கு பேசப்பட்ட உதியமான 2.80 கோடி சம்பளத்தையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் அடுத்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை பரிந்துரை செய்தார் .ஆனால் நேற்று நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் போட்டியிலேயே கம்பிறை அணியில் சேர்க்கமால் கழட்டிவிட்டுள்ளார். ஆனால் கம்பிரின் துரதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை அவரை போட்டியில் இடம்பெறாததால் டெல்லி அணி சிறப்பாக ஆடியது

நேற்று நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி அபாரமாக விளையாடி 219 ரன்களை குவித்தது . மேலும் அந்த அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 40பந்துகளில் 93 ரன்களை குவித்து நோட் அவுட் பட்சமானாக நின்றது அசத்தினார்.பின்னர் களமிறங்கிய 164 ரங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி அபார வெற்றியை பெற்றது.

gautam-gambhir-l-and-shreyas-iyer

மேலும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றது கம்பிருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், தான் போட்டியில் விளையாடாத நிலையிலா அணி வெற்றி பெற வேண்டும் என்று கம்பிர் வருத்தத்தில் இருக்கிறாரோ என்னமோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த போட்டியில் கம்பிர் ஷ்ரேயாஸ் ஐயரால் ஓரம்கட்ட பட்டாரா இல்லை தாமே போட்டியில் இருந்து விலகினாரா என்று தெரியவில்லை.

Advertisement