கொஞ்சம் இல்லனா என்னோட காலே போயிருக்கும். மோசமான விபத்து குறித்து – மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்

Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்களிலும் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரிலும் இவர் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். போட்டியின் எந்த நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு மேட்ச் வின்னராகவும் இருந்து வருகிறார்.

Maxwell

- Advertisement -

இந்நிலையில் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடருக்கு பிறகு மேக்ஸ்வெல் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். குறிப்பாக தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் கூட அவர் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மேக்ஸ்வெல் ஏன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறித்த விவரத்தை அவரே வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : சமீபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்த போது அந்த பார்ட்டியின் இடையே கொண்டாட்டத்தில் ஈடுபபடும்போது தவறுதலாக அவரது நண்பர் மேக்ஸ்வெல்லின் காலின் மீது விழுந்துவிட்டாராம்.

Glenn Maxwell

எதிர்பாராமல் நடைபெற்ற அந்த சம்பவத்தில் இன்னும் சற்று விட்டுருந்தால் தனது காலே முறிந்திருக்கவும் வாய்ப்பிருந்ததாக அவர் கூறியுள்ளார். அதேபோன்று அவரின் நண்பர் அவர் மீது விழும்போது சற்று சுதாரித்து கொண்டதால் பெரிய விபத்தில் இருந்து தப்பி இருந்தாலும் பெரிய அளவில் காயம் அடைந்துவிட்டாராம்.

- Advertisement -

அதன்காரணமாகவே தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் சிகிச்சையில் இருப்பதாகவும், இன்னும் அவரது காயம் குணமடைய 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என்று அவரே தெரிவித்துள்ளார். மேலும் இந்த காயத்திலிருந்து மெல்ல மெல்ல அவர் மீண்டுவருவதாகவும் அவரது மனைவி வினி ராமன் அவரை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிலரின் லாபத்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அழிவு, ஐசிசியும் கவனிப்பதில்லை – ஐபிஎல்’லை தாக்கிய பென் ஸ்டோக்ஸ் தைரிய பேச்சு

இப்படி காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்தையும் மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளதால் இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement