இந்திய அணியின் இப்படி ஒரு சக்திவாய்ந்த வீரரால் டெஸ்ட் போட்டிகளில் ஏன் சாதிக்க முடியவில்லை என்று தெரியவில்லை – கில்க்ரிஸ்ட் பேட்டி

Gilchrist
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
Iyer-2

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா குறித்து கூறியதாவது : ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நான் அவருடன் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஆடும் போது எனக்கு தெரியும்.

- Advertisement -

அவர் மிகப் பெரிய வீரராக வருவார் என்று அப்போதே நினைத்தேன். அதனைப் போன்றே தற்போது இந்திய அணியில் ஒரு பெரிய வீரராக உருவெடுத்துள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக வெளுத்து கட்டுகிறார். அதேபோன்று அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஏன் ஆட முடியவில்லை என்று தெரியவில்லை.

rohith

ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி நான் கூறுகிறேன் அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும். அவரை தொடக்க வீரராக களம் இறக்குங்கள் அவரால் நிச்சயம் சாதிக்க முடியும். மேலும் அவருக்கு சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சற்று சிக்கலாக உள்ளது. இருப்பினும் அவர் அதனை சரிபடுத்தி டெஸ்ட் போட்டியிலும் உலகத்தரம் வாய்ந்ததாக வீரராக உருவெடுப்பார் என்று கில்கிறிஸ்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement