கவலைப்படாதே சகோதரா உன் அப்பா உன் ஆட்டத்தை பார்த்து பெருமை படுவார் – இளம் வீரருக்கு ஆறுதல் கூறிய கெயில்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

KXIPvsKKR

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Mandeep 1

இந்நிலையில் போட்டி முடிந்து கிரிஸ் கெயில் மந்தீப் சிங் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதாவது இந்த போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னரே அவரது அப்பா மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இறந்த அன்றே ஒரு போட்டியில் கலந்து கொண்ட மந்தீப் சிங் விளையாடினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதுகுறித்து கெயில் பேசுகையில் : கடந்த போட்டியின் போதே நாங்கள் மந்தீப் சிங்கிற்காக அந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதேபோன்று இன்றைய போட்டியிலும் அவரே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். உண்மையில் அவரது அப்பா அவரை பார்த்துக் கொண்டிருப்பார் .மேலும் எனது அப்பாவும் பார்த்துக் கொண்டிருப்பார்.

mandeep singh 1

நிச்சயம் மந்தீப் சிங்கின் அப்பா வானத்தில் இருந்து அவரது ஆட்டத்தை பார்த்து பெருமை அடைவார் என்றும் கெயில் கூறினார். அதுமட்டுமின்றி அணி பயிற்சியாளர்கள் இந்த போட்டியை ஒரு சீனியர் வீரர் கையில் எடுத்து விளையாட வேண்டும் என்று கூறினார்கள். அதன்படி நான் இந்த போட்டியை எடுத்து விளையாடியதில் மகிழ்ச்சி என்று கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement