என்னது நான் ஓய்வு பெற்றுவிட்டேனா எனக்கே ஷாக்கா இருக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லை – கெயில் விளக்கம்

Gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது அதன்படி முதலில் விளையாடிய மழையின் காரணமாக போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

toss

அந்த 35 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டி.எல்.எஸ் முறைப்படி 32.3 ஓவர்களில் 256 ரன்கள் குவித்து வெற்றி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கெயில் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழந்ததும் அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வழிஅனுப்பினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இதனால் நேற்றைய போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்றும் அனைவரும் நினைத்தனர்.

Gayle 1

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் கெயில் கூறியதாவது : நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. இப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் தொடர்கிறேன். அடுத்த அறிவிப்பு வரும் வரை நான் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்கள் கெயில்.

Advertisement