MI vs KXIP : பொல்லார்ட் வியூகத்தை பிரித்தெடுத்த கெயில் – அதிரடி துவக்கம்

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன

Gayle
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

Pollard

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் ரோஹித் விளையாடாததால் மும்பை அணிக்கு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார். துவக்கம் முதலே அதிரடி காட்டிய கெயில் சூறாவளி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 36 பந்துகளை சந்தித்த 63 ரன்களை அடித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் அதிரடியான துவக்கமே பஞ்சாப் அணியின் ரன் குவிப்புக்கு அடித்தளமாக அமைந்தது.

Rahul

கெயிலுக்கு எதிராக பொல்லார்ட் வேகப்பந்துவீச்சாளர்களை வீசவைக்க அவர்களை பிரித்த கெயில், மீண்டும் சுழற்பந்து வீச்சாளர்களையும் பதம் பார்த்தார். பொல்லார்ட் மாற்றி மாற்றி வியூகம் அமைத்தும் அதை எளிதாக எதிர்கொண்டு கெயில் ரன்களை சேர்த்தார். தற்போது 198 ரன்கள் இலக்கினை எதிர்த்து விளையாட மும்பை அணி தயாராகி வருகிறது.

Advertisement