SRH vs KXIP : பந்தை நிறுத்த முயற்சித்து கால்பந்து விளையாடிய கெயில் – வீடியோ

நேற்று நடந்த போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 212 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் முஜீப் வீசிய 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லைக்கோட்டிற்கு வேகமாக சென்றது

Gayle
- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 212 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் முஜீப் வீசிய 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லைக்கோட்டிற்கு வேகமாக சென்றது. அந்த பந்தினை துரத்தி சென்ற கெயில் அந்த பந்தினை தடுக்க நினைத்து ஓடி சென்று பந்தை பவுண்டரி லைனுக்கு தள்ளி பவுண்டரி ஆக்கினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பந்தை தடுக்க நினைத்த கெயிலின் இந்த நிகழ்வினை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காமெடியாக பகிர்ந்து வருகின்றனர். கெயிலின் இந்த முயற்சி ரசிக்க வைக்கும் வகையிலே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் aவில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

- Advertisement -

Ashwin

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களையும் குவித்தனர்.

SRH

இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 79 ரன்களை அடித்தார். இதனால் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement