KXIP vs RCB : கெயில் அடித்த இமாலய சிக்ஸரை ஒற்றை கையால் பிடித்த பஞ்சாப் அணியின் ரசிகர் – வீடியோ

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியின் துவக்க

Gayle
- Advertisement -

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியின் துவக்க வீரரான கெயில் ஆட்டமிழக்காமல் 99 ரன்களை அடித்தார். இதில் 5 பிரமாதமான சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் அவர் அடித்த ஒரு உயரமான சிக்ஸரை போட்டியை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கூட்டத்தில் ஒருவர் அட்டகாசமாக ஒரு கையால் பிடித்து அசத்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

Devilliers

பிறகு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கோலி 67 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை அடைய வைத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement