Chris Gayle : மழையால் நின்ற போட்டியிலும் சாதித்து காட்டிய கெயில் – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 15 ஆவது போட்டி நேற்று தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், ஹோல்டர் தலைமை

chris-gayle
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 15 ஆவது போட்டி நேற்று தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.

rsa vs wi

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டத்தை தொடர்ந்த தொடக்க வீரர் அம்லா 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் மார்க்கம் 5 ரன்களில் வெளியேற அந்த அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது

- Advertisement -

அதன் பிறகு மழை பொழிய ஆரம்பித்தது. இதையடுத்து மழை நிற்கும் நிற்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், மைதான நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். நிற்காமல் மழை பொழிந்து கொண்டிருந்தது மேலும் மைதானத்தில் நிலைமையும் மிகவும் மோசமாகி போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

rain

மழையால் நின்ற இந்தப் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கெயில் ஒரு உலக சாதனையை புரிந்துள்ளார். அது யாதெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் நேற்று பெற்றார். நேற்றைய போட்டியில் அம்லா கேட்சை பிடித்ததன் மூலம் இந்த உலகசாதனையை அவர் நிகழ்த்தினார்.

gayle

இதுவரை ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 121 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் 120 கேட்ச்களை பிடித்ததே அந்த அணியின் தனி நபர் அதிகபட்ச கேட்ச்களாக இருந்தது. அந்த சாதனையை நேற்று கெயில் முறியடித்தார். பேட்டிங்கில் மட்டுமல்ல பீல்டிங்கிலும் என்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கெயில்.

Advertisement