Chris Gayle : அம்பயரை நேருக்கு நேர் எதிர்த்து மார்பில் இடித்த கெயில் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

Gayle
- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் அணி 170 ரன்கள் என்ற இலக்கினை ஆடியது. அப்போது 5 ஆவது ஓவரை தீபக் சாகர் வீச 4 ஆவது பந்தில் கெயில் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார். பந்து அருகிலே சென்றதால் பீல்டிங் செய்த சென்னை வீரர் ஸ்டம்பை நோக்கி வேகமாக த்ரோ செய்தார். அதற்குள் கிரீஸுக்கு வரவேண்டும் என்று நினைத்த கெயில் வேகமாக ஓடிவர நிற்கமுடியாமல் அம்பயரின் மீது இடித்தவாறே சிறிது தூரம் ஓடினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பிறகு சிரித்துகொண்டே அம்பயரின் மார்பின் மீது செல்லமாக இடித்தார். அம்பயரும் கெயிலை செல்லமாக கண்டித்தபடி சென்றார். அதிரடி ஆட்டக்காரரான கெயில் அடிக்கடி இதுபோன்ற குறும்பு செயல்களை செய்வது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

Ragul

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Advertisement