இந்த 2 மாற்றங்களை செய்யலனா ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக கூட தோக்க வாய்ப்பிருக்கு – சுனில் கவாஸ்கர்

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இதுவரை இந்திய அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்தது.

Williamson

இந்த இரண்டு மோசமான தோல்விகள் காரணமாக இந்திய அணியின் ரன்ரேட் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்தே ஆகவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்திய அணியின் சீனியர் வீரரான அஷ்வினை சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ashwin

இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் போன்ற அனுபவ வீரர் நிச்சயம் இது போன்ற போட்டிக்கு முக்கியமான ஒருவர். அவரால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதே போன்று மற்றொரு மாற்றமாக ராகுல் சாகரை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் – செம பிளேயர் தான்

ஏனெனில் அவராலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதன் காரணமாக இந்த இரண்டு மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். மற்றபடி வருன் சக்ரவர்த்தி அணியில் இருக்கலாம் எனவே மூன்று ஸ்பின்னர் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்றும் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement