Worldcup : உலகக்கோப்பை இந்தமுறை இங்கிலாந்து அணிக்கு தான் – கவாஸ்கர் பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Sunil-gavaskar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலககோப்பை தொடர் குறித்து பேட்டி அளித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது : இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் தகுதியுடன் இருக்கிறது என்பதனை நான் மறுக்கவில்லை. ஆனாலும், இங்கிலாந்து அணி தற்போது ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், கடந்த சில வருடங்களாக சிறப்பாகவும் ஆடிவருகிறது.

மேலும், அதுமட்டுமின்றி 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களை நடத்திய நாடுகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை கைப்பற்றின. எனவே, இந்த வருடம் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்ற நிறைய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும், மற்ற அணிகளுக்கும் தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கவாஸ்கர் தெரிவித்தார்.

Advertisement