- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற அடுத்த இந்திய வீரர் – இவர்தானா ? ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய கௌரவ விருதான பத்மஸ்ரீ விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரரின் பெயர் இடம் பெற்றுள்ளது பலதுறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கு நபர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிப்பார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இந்திய அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கம்பீர் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது பிராம்நாத் கோவிந்த் அவர்கள் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் அரங்கில் அளித்து கவுரவித்தார். இந்த நிகழ்வை கம்பீர் தனது அதிகாரபூர்வ டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதோ அந்த ட்வீட் :

கம்பீர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4119 ரன்களை அடித்துள்ளார் இதில் 9 சதங்களும் 22 அரை சதங்களும் அடங்கும். மேலும் ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்கள் அடித்துள்ளார் இதில் 11 சதங்களும் 34 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -
Published by