பயிற்சியாளரா நீங்க எதுக்கு இருக்கீங்க? இளம் வீரரை தேர்வு செய்யாததால் ராகுல் டிராவிட்டை விளாசும் கம்பீர் – நடந்தது என்ன

Gautam Gambhir Rahul Dravid
- Advertisement -

2023 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதிலாக இஷான் கிசான், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் வகையிலேயே இத்தொடரில் சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு புதிய அணி களமிறங்க உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

பயிற்சியாளர் என்ன பண்றிங்க:
2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க தடுமாறிய அவர் ஃபிட்டாக இல்லாத காரணத்தால் கழற்றி விடப்பட்டார். கடைசியாக 2021 ஜூலையில் விளையாடியிருந்த அவர் அதன் பின் மீண்டும் விளையாட உடல் எடையை குறைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வருகிறார்.

குறிப்பாக 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பை, இரானி கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது அவரைப் போன்ற தரமான வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்று தேர்வுக்குழுவிடம் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தான் பேசி தேர்வு செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர். தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும்”

“அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல. அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரிதிவி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். சொல்லப்போனால் அவர் (பிரிதிவி) இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும்”

இதையும் படிங்கபார்டர் – கவாஸ்கர் தொடருக்கு வந்துவிடுவாரா? ரிஷப் பண்ட் எப்போது களத்திற்கு வருவார் – டாக்டரின் முதற்கட்ட ரிப்போர்ட் இதோ

“நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும். அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரிதிவி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்” என கூறினார்.

Advertisement