டி20 கிரிக்கெட் மட்டுமல்ல. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இவர் சாதிப்பார் – இளம் பவுலரை புகழ்ந்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.

INDvsRSA

முதலாவது டி20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 211 ரன்களை குவித்தாலும் பந்துவீச்சில் சரிவர திட்டங்களை செயல்படுத்தாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் இரு அணிகளும் குவித்தும் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் 35 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானை இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆவேஷ் கான் நிறைய திறமை உடைய பந்துவீச்சாளராக திகழ்கிறார். அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதேபோன்று இக்கட்டான வேளைகளில் முக்கியமான ஓவர்களை வீசும் தாராள மனசும் அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னைத் தானே முன்னேற்றிக் கொண்டு வருகிறார்.

Avesh khan

இளம் வீரரான அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு ஒரு கண் வைத்துள்ளார். நிச்சயம் அவர் ஒரு மிகச்சிறப்பான பவுலர் என்று நான் கூறுவேன். ஏனெனில் இளம் வீரரான அவர் தனது கடின உழைப்பை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நிச்சயம் நான் அவரைப் பற்றி கூற வேண்டியது யாதெனில் : அவரை ஒரு டி20 பவுலராக மட்டும் பார்க்க வேண்டாம். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக சாதிப்பார். அவருடைய தன்னம்பிக்கையான பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்திய அணியில் வெகுவிரைவில் அவர் மூன்று பார்மெட்டிலும் மிகச் சிறப்பான வீரராக மாறுவதை நாம் காண தான் போகிறோம்.

இதையும் படிங்க : இதனால தான் அந்த பையனுக்கு ஐ.பி.எல் ஏலத்துல கோடிகளை வாரி கொடுத்தாங்க – இளம்வீரரை புகழ்ந்த கம்பீர்

தற்போது உள்ள அணியில் சிறப்பான வீரர்கள் பலர் இருப்பதால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் தான். அடுத்த தலைமுறைக்கான பந்துவீச்சாளர்கள் தற்போது தயாராகி வரும் வேளையில் ஆவேஷ் கான் இதில் மிக முக்கிய பங்கினை வகிப்பார் என கம்பீர் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement