அந்த டீமை மட்டும் சாதாரணமா நினைக்காதீங்க. அவங்களும் டேஞ்சர் தான் – எச்சரித்த கம்பீர்

gambhir
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடரானது நாளை அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது.

IND

- Advertisement -

இவ்வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சந்திக்கப் போகும் சவால்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

இந்த டி20 உலக கோப்பை தொடரில் பலரும் பல்வேறு அணிகளை குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி அனைத்து அணிகளையும் எதிர்த்து விளையாட தயாராக இருந்தாலும் என்னை பொறுத்தவரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது சற்று கவனமாக அவர்களை எதிர் கொள்ள வேண்டும்.

INDvsSL

ஏனெனில் இலங்கை அணியும் மிக மிக ஆபத்தான அணிதான். சமீபத்தில் அவர்களது சிறப்பான ஆட்டம் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வெல்லும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இலங்கை அணி அதை செய்து காண்பித்தது.

- Advertisement -

அதேபோன்று இந்த தொடரில் யாராலும் கணிக்க முடியாத அணியாக இலங்கை அணி பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. அந்த அணியில் சரியான கலவையில் வீரர்கள் உள்ளதால் நிச்சயம் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் இலங்கை அணியை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களை கவனத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : ஸ்கூல்ல உங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் என்ன? பள்ளி குழந்தையின் கேள்விக்கு பதிலளித்த – தல தோனி

மேலும் அவர்கள் ஆசிய கோப்பையை வென்று அதே நம்பிக்கையுடன் தற்போது டி20 உலக கோப்பையை எதிர்கொள்வதால் அவர்களிடம் நல்ல தன்னம்பிக்கை இருக்கும். எனவே அந்த அணியை குறைத்து மதிப்பிடாமல் இந்த சில விடயங்களை எல்லாம் எண்ணத்தில் வைத்து கவனமாக விளையாட வேண்டியது அவசியம் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement