3-ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை தூக்கிட்டு இவரையே விளையாட வையுங்க – குரல் கொடுத்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது ஜொஹனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வயிற்று வலி காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடாமல் வெளியில் அமர்ந்துள்ளார். அவருக்கு பதிலாக இந்த போட்டியில் ஹனுமா விஹாரி விளையாடி வருகிறார். இருப்பினும் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் விளையாட தயாராகி அணியில் இணைவார் என்பதனால் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் யாராவது ஒருவர் வெளியேற வேண்டும் அப்படி எந்த வீரர் வெளியேறப்போகிறார் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் தற்போது 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இருவரும் அரை சதம் அடித்துள்ளனர்.

அதேவேளையில் தொடர்ந்து தனது டெஸ்ட் அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் விகாரியும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்சில் நாட் அவுட்டாக 40 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக ரஹானே அல்லது விகாரி ஆகிய இருவரில் ஒருவர்தான் நீக்கப்படும் இடத்தில் இருப்பதாக தெரிகிறது. அப்படி இந்த இருவரில் யார் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Vihari

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரகானே கடந்த சில ஆண்டுகளாகவே சற்று சுமாராகத்தான் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலும், விகாரியும் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் குவித்துள்ளார். அது மட்டுமின்றி வெளிநாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக கணிசமான ரன் குவிப்பை பின்வரிசையில் வழங்கி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜோகனஸ்பர்க் மைதானம் ராசி அப்பிடி இப்பிடின்னு சொன்னாங்க. கடைசில இப்படி ஆயிடுச்சி – புலம்பும் ரசிகர்கள்

இதன் காரணமாக நிச்சயம் விஹாரியை அடுத்த போட்டியில் தக்க வைக்க வேண்டும் என்றும் ரஹானேவை வெளியேற்றிவிட்டு அந்த இடத்திற்கு கோலியை கொண்டுவர வேண்டும் என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement