சி.எஸ்.கே பிளே ஆப்புக்கு முன்னேறியதும் தோனி இதனை செய்தே ஆகவேண்டும் – கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் தற்போது சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த இரண்டு போட்டியிலுமே சென்னை அணியின் கேப்டன் தோனி ஆறாவது இடத்தில் இறங்கி 3 மற்றும் 11 ரன்களை குவித்துள்ளார்.

csk

- Advertisement -

பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கிய தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருருந்தார். இருப்பினும் தோனியிடம் பழைய அதிரடி ஆட்டம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில் தற்போது தோனி எந்த இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி சென்னை அணிக்காக நம்பர் நான்காமிடத்தில் இறங்கினால் அது அணியின் ரன் குவிப்புக்கு நல்லது. ஏனெனில் சேசிங் செய்யும்போதும் சரி முதல் பேட்டிங்கிலும் சரி தோனி நான்காமிடத்தில் இறங்கும்போது சிறப்பாக இருக்கும். சிஎஸ்கே அணியானது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற உடன் நிச்சயம் தோனி முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Dhoni-1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி நான்காவது இடத்தில் விளையாடும் போது நிச்சயம் அவரால் நிறைய ரன்களை குவிக்க முடியும். அதுமட்டுமின்றி களத்தில் அதிக பந்துகளை சந்திப்பதன் மூலமாக அவரால் நல்ல ஸ்கோரை கொடுக்க முடியும். சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதும் தோனி இதை செய்வார் என்று நான் நம்புகிறேன் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தோனி 40 வயதை தொட்டுள்ளதால் நிச்சயம் கூடிய விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதால் தோனியின் அதிரடியை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement