ஐ .பி.எல் போட்டிகளில் ஆடிவரும் டெல்லி அணியின் கேப்டன் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார் .ஐ .பி.எல் போட்டிகளின் 11 ஆம் சீசன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.அனைத்து அணிகளுமே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை தக்கவைத்துக் கொள்ள போராடிவருகின்றனர். அனால் டெல்லி அணி நடந்து முடிந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் அந்த அணியின் கேப்டனாக இருந்துவருகிற கெளதம் கம்பீரும் தான் ஆடிய 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டிகளில் மட்டுமே அரை சதம் அடித்துள்ளார் மற்ற போட்டிகளில் பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களிலே அவுட் ஆகியுள்ளார்.மேலும் அதிரடி ஆட்டக்காரர்களான மேக்ஸ்வேள்,ராய் போன்றவர்கள் இருந்தும் நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றிபெறாமல் தவித்து வருகிறது டெல்லி அணி.
இதனால் அணியின் மோசமான தோல்விகளுக்கு பெறுபேற்று தனது கேப்டன் பதவியிலிருந்து கவுதம் கம்பிர் விலகியுள்ளார். இவருக்கு அடுத்து அந்த பதவி இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணி மோசமாக ஆ டிவருவதால் அடுத்து வரும் போட்டிகளில் டெல்லி அணி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
True, that I’ve stepped down from DD captaincy. Just to clarify it was my call, nothing from the management or coaching staff. I may not be leading from the front but I will be the last man standing for @DelhiDaredevils. No individual bigger than d team. Very much a #DilDIlli
— Gautam Gambhir (@GautamGambhir) April 25, 2018
இதனால் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷ்ரேயாஸ் அய்யருக்கு சற்று நெருக்கடி கூடியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 10 ஐபில் தொடர்களிலும் ஒரு முறை கூட டெல்லி அணி கோப்பையை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.