இந்த டி20 வேர்ல்டுகப் தொடர்நாயகன் விருதினை ஜெயிக்கப்போவது இவர்தான். கோலி கிடையாது – கம்பீர் கருத்து

Gautam-Gambhir-and-Virat-Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ஜெயிக்கும் வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்போடு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சூப்பர் 12 ஆட்டங்களின் அடிப்படையில் ஐந்து போட்டிகளில் விளையாடிய இந்திய அணியானது நான்கு வெற்றிகளை பெற்று குரூப் இரண்டில் முதலாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Arshdeep Singh 1

- Advertisement -

அதன்படி வரும் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எதிர்த்து தங்களது அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியினை பெற இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 25 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் சூரியகுமார் யாதவ் தான் இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகனாக விருது பெறுவார் என்று தனது கருத்தினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நாம் இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய வீரர்களின் ஆட்டத்தை பற்றி பேசி வருகிறோம். இந்திய அணியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் போன்ற அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிராப்பரான கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டும் தான் விளையாடுவார்கள்.

Suryakumar YAdav

ஆனால் இவர்கள் மூவரைக் காட்டிலும் சூரியகுமார் யாதவ் வித்தியாசமானவர். அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் விளையாட முடிகிறது. அதிலும் குறிப்பாக நான்காவது இடத்தில் களமிறங்கி இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று அரை சதங்களுடன் 200 ரன்களை அவர் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். இதெல்லாம் சாதாரண விடயம் கிடையாது.

- Advertisement -

நிச்சயம் இந்திய அணி அடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெறும். அதேவேளையில் சூரியகுமார் யாதவே இந்த டி20 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகனாக விருது பெறுவார் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். கம்பீர் கூறிய இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : என்னுடைய வித விதமான ஷாட்களுக்கு காரணமே இதுதான். சீக்ரெட்டை உடைத்த – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ்

ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் இந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரராக பெருமை பெற்ற சூரியகுமார் யாதவ் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக பார்க்கப்பட்ட அவர் இதுவரை அதிரடியில் அசத்தி வரும் வேளையில் அரையிறுதியிலும், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக தனது அதிரடியை தொடர்ந்தால் கட்டாயம் இந்திய அணிக்கு தான் கோப்பை என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement