இவரால் ஐ.பி.எல் தொடரில் 2-3 செஞ்சுரிகளை அடிக்க முடியும் – கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

இன்னும் சில தினங்களில் 14வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் வேளையில் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா அச்சம் காரணமாக சில வீரர்கள் அணியில் விளையாட முடியாமல் வெளியேறி விட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் தற்போது களமிறங்க தயாராக இருக்கின்றனர்.

Eng-ipl

அவர்கள் எவ்வாறு விளையாட போகிறார்கள் ? என்பதும் இந்த தொடருக்கான இரண்டாம் பாதியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை அளித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் இந்த தொடரில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். ஆனாலும் இதுவரை அவரிடமிருந்து அவருடைய பெஸ்ட்டை நாம் பார்க்கவில்லை. விராட்கோலி 2016ஆம் ஆண்டு 973 ரன்களைக் குவித்தது போல ராகுல் நிச்சயம் ஒரு அருமையான சீசனை விளையாட முடியும்.

அதுமட்டுமின்றி ஒரே சீசனில் 2-3 சதங்களை அவரால் நிச்சயம் அடிக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் இந்த தொடரில் இதுவரை ரன்கள் குவித்திருக்கிறார். ஆனாலும் இன்னும் அவரிடம் இருந்து நாம் முழுமையான பெஸ்ட் இன்னிங்க்ஸை பார்க்கவில்லை. அவருக்கு இருக்கும் திறனுக்கு நிச்சயம் அவர் ஒரு பெரிய சீசன் பேட்ஸ்மேனாக நிச்சயம் வருவார் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

rahul

இந்த தொடரில் பஞ்சாப் அணி நிறைய மாற்றங்களை செய்து இருந்தாலும் அதிக தோல்விகளை கண்டு 6வது இடத்தில் உள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட பஞ்சாப் அணியால் நிச்சயம் அடுத்து வரும் சீசன்களில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement