ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தற்போது இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பாகிஸ்தான் அணியின் வீரரான அப்ரிடி பதிவிட்டதாவது
Kashmiris must be given their due rights as per #UN resolution. The rights of Freedom like all of us. Why was @UN created & why is it sleeping? The unprovoked aggression & crimes being committed in Kashmir against #Humanity must be noted. The @POTUS must play his role to mediate
— Shahid Afridi (@SAfridiOfficial) August 5, 2019
ஐ.நா சபை உறுதியளித்தபடி காஷ்மீரிகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் சுதந்திர உரிமைகள் என்பது அனைவருக்கும் சமமானது. ஐநாசபை ஏன் உருவாக்கப்பட்டது ? அது தற்போது தூங்குகிறதா ? ஆக்கிரமிப்புகளும் குற்றங்களும் காஷ்மீரில் மனித இனத்திற்கு எதிராக அரங்கேறி வருகிறது.
அமெரிக்க பிரதமர் இதில் நடுநிலையாக செயல்படவேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள கம்பீர் பதிவிட்டதாவது : அப்ரிடி சரியான நபர்களை அடையாளம் கண்டு விட்டார். அங்கே ஆக்ரமிப்புகள் எதுவும் தூண்டப்படவில்லை எதற்கு இவர் இப்போ சத்தம் போடுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் நடக்கும் சம்பவம் குறித்து பேச மறந்து விட்டார். ஆனால் ஜம்மு காஷ்மீர் குறித்து பொதுவாக பேசுகிறார் கவலை வேண்டாம். அவை உடனே தீர்க்கப்படும் மகனே நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கம்பீர் பதிவிட்டுள்ளார்.