என்ன சொல்றிங்க ! 66 வயது முன்னாள் இந்திய வீரருக்கும் 38 வயது பெண்ணுக்கும் திருமணமா – முழுவிவரம் இதோ

Arun Lal
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் இந்தியாவிற்காக 80களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியவர். கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் அதன்பின் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் 10000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த அவர் இந்தியாவிற்காக 851 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த 1989இல் ஓய்வு பெற்ற அவர் அதன்பின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வந்தார். கடந்த 2016 வரை நடைபெற்ற பெரும்பாலான உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வந்த அவர் புற்றுநோய் காரணமாக அதன்பின் அந்த பணியை துறக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சொந்த மாநிலமான கொல்கத்தாவின் பெங்கால் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ள பெங்கால் அணி இந்த வருட ரஞ்சி கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

66 வயதில் திருமணம்:
இந்நிலையில் தற்போது 66 வயது நிரம்பியுள்ள அவர் விரைவில் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் வெறும் 38 வயது மட்டுமே நிரம்பியுள்ள பெண்ணை மணக்க போகிறார் என்று செய்தி நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைகிறது. ஆனால் இந்த திருமணத்திற்கான முக்கிய காரணமும் பின்னணியில் உள்ளதை பற்றி பார்ப்போம்.

இந்திய முன்னாள் வீரரான அருண் லால் ஏற்கனவே ரீனா எனும் பெண்ணுடன் திருமணம் செய்து பல வருடங்களாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்ட காரணத்தால் இருவருமே சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று சமீப காலங்களில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இருப்பினும் அவரின் மனைவிக்கு ஒரு நோய் ஏற்பட்டு உடல்நிலையில் குறைபாடு ஏற்பட்ட காரணத்தால் தற்போது விவாகரத்தையும் தாண்டி அவரை அருண் லால் கவனித்து வருகிறார்.

- Advertisement -

38 வயது பெண்ணுடன்:
இருப்பினும் கிரிக்கெட் சம்பந்தமான வேலைகளை பார்க்க வேண்டியதுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ளும் வகையில் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக தொடர்பில் இருந்த தனது நீண்ட கால தோழியை அவர் தற்போது திருமணம் செய்ய உள்ளார். புல்புல் சஹா எனும் பெயரைக் கொண்ட அவரின் தோழிக்கு தற்போது 38 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் அவர் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

இதற்காக தனது முதல் மனைவியிடம் ஏற்கனவே அருண் லால் மனப்பூர்வ சம்மதத்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த ஜோடி ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அதை தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்கிடையில் முதல் மனைவியின் சம்மதம் கிடைத்துவிட்டதால் வரும் மே 2-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கொல்கத்தாவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து முதல் மனைவியைப் அன்பாகவும் அரவணைப்பாகவும் பார்த்துக் கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

- Advertisement -

இதை அடுத்து அருண் லால் அவரின் முதல் மனைவி மற்றும் 2-வது மனைவி புல்புல் சென் ஆகியோர் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. மேலும் கொல்கத்தாவில் உள்ள ஸ்ப்ளண்டே நகரில் நடைபெறும் இந்த திருமணத்திற்காக அச்சிடப்பட்டுள்ள வண்ணமிகு பத்திரிகையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியிலும் மொயின் அலி நீக்கம். காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

இந்த திருமணத்திற்கு தனது காலத்தில் உள்ளூர் மற்றும் இந்தியாவிற்காக விளையாடிய மிகுந்த நெருங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அருண் லால் அழைப்பு விடுத்துள்ளார். மொத்தத்தில் இந்த செய்தியை பற்றி அறியும் ரசிகர்கள் வியந்து போய் அருண் லாலுக்கு தங்களது மனமார வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement