MS Dhoni : தோனி இதற்காகவே நேற்று சி.எஸ்.கே அணியில் விளையாடவில்லை – பிளமிங் விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமை

Fleming
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Dhoni

போட்டி முடிந்து தோனி ஏன் போட்டியில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தை பிளெமிங் கூறினார். அதில் அவர் கூறியதாவது : தோனி கடந்த இரண்டு போட்டிகளாக முதுகு பிடிப்பு காரணமாக சற்று சிரமப்பட்டு வந்தார். இன்றைய போட்டியில் அவர் விளையாடினால் வலியின் தாக்கம் அதிகரிக்குமா என்று யோசித்து ஒரு முன்எச்சரிக்கைக்காகவே இன்றைய போட்டியில் தோனி ஓய்வு எடுத்துக்கொண்டார் என்று பிளெமிங் தெரிவித்தார்.

மேலும்,போட்டிக்கு முன்பு வரை அவர் அணி வீரர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது கூட அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார். இருப்பினும் இப்போது அவர் முதுகுவலி அதிகரித்தால் அது இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டிகளை பாதிக்கும் என்ற எண்ணத்திற்காகவும் அவர் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ஆடுவதை தவிர்த்தார் என்று பிளெமிங் தெரிவித்தார்.

Advertisement