RCB vs CSK : தோனியின் பேட்டிங் சென்னை அணியின் இந்த தவறுகளை மறைத்தன – பிளமிங் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Fleming
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Dhoni

போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில் : இந்த போட்டி சிறப்பான ஒரு போட்டியாகும். இரு அணிகளுமே சிறப்பாக செயல்பட்டன. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட சிறிய தவறே காரணமாக அமைந்தது. சென்னை அணியின் துவக்கத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ சரியான பாட்னர்ஷிப் அமையாமல் போனது ஒரு 50 + பாட்னர்ஷிப் அமைந்திருந்தால் தோனி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்திருப்பார்.

தோனியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரது ஆட்டத்தில் நேற்று அருமையான ஷாட்கள் நேற்று மைதானத்தில் பறந்தன. அவர் இருந்த பார்மிற்கு அவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு அளித்திருந்தால் சிறப்பான வெற்றியை பெற்று இருக்கும். இந்த போட்டியில் தோனியின் சிறப்பான பேட்டிங் சென்னை அணியின் துவக்க வீரர்கள் செய்த தவறினை மறைத்து அணியை சுமாரான தோல்வியை அடைய வைத்தது. இல்லையெனில் பெரிய படுமோசமான தோல்வியை சென்னை அணி சந்தித்திருக்கும் என பிளெமிங் கூறினார்.

Advertisement