MS Dhoni : தோனி மற்றும் ஜடேஜா உடல்நிலை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட – பிளமிங்

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது

Fleming
- Advertisement -

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தோனி மற்றும் ஜடேஜா காய்ச்சலால் போட்டியில் ஆடாதது மற்றும் டுப்ளிஸிஸ் போட்டியில் விளையாடாதது என மும்பை அணி எளிதாக சென்னை அணியை வீழ்த்தியது.

Dhoni

- Advertisement -

கடந்த போட்டியில் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறினார். இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ஜடேஜாவின் உடல்நிலை பரிசோதனைக்கு பிறகு முக்கிய தகவல் ஒன்றினை சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங் வெளியிட்டார்.

அதன்படி பிளெமிங் கூறியதாவது : முதலில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அவர்களின் உடல்நிலையை பரிசோதித்ததில் அவர்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டிரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் கடும் காய்ச்சல் காரணமாக தற்போது இருவரும் மிகவும் சோர்ந்து உள்ளனர் அவர்களின் உடல்நிலை தினமும் கண்காணிப்பில் உள்ளது.

Dhoni

எனவே அவர்கள் இருவரும் வரும் சில போட்டிகளில் ஆடுவது சிரமம் எனினும் பிளேஆப் சுற்றுக்கு முன் இருவரும் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று பிளெமிங் கூறினார். சென்னை அணி தற்போது கிட்டத்தட்ட பிளேஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement