Ferguson : இவர் எங்கு வேண்டுமெனாலும் சிக்ஸ்களை தொடர்ந்து அடிப்பார் – பெர்குசன் சவால்

ஐ.பி.எல் தொடரின் 23 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Kkr
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதஉள்ளன.

Dhoni

இந்த தொடரில் கொல்கத்தா அணி சிறப்பான பார்மில் உள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களான லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சிறப்பான துவக்கத்தினை அளித்து வருகின்றனர். மேலும் நடுவரிசை வீரர்கள் மற்றும் கடைசியில் ரசல் ஆகியோர் எவ்வளவு ரன்கள் இருந்தாலும் அடிக்கக்கூடிய நிலையில் உள்ளனர்.

- Advertisement -

எனவே, இந்த போட்டியில் கொல்கத்தா அணியே வெற்றிபெரும் ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். ஆனால், சென்னை மைதானத்தில் சென்னை அணிக்கு இருக்கும் ஆதரவின் காரணமாக சென்னை அணியே வெற்றிபெரும் என்று சி.எஸ்.கே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

CSKShop

இந்நிலையில் கொல்கத்தா அணியின் வீரரான பெர்குசன் கூறுகையில் : இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு கஷ்டத்தை தரும். மேலும், இப்போது கொல்கத்தா அணி சிறப்பான பார்மில் உள்ளது. அதிலும் ரசல் அனைத்து அணிகளுக்கும் எதிராக தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.

Russell

அதனை சென்னை அணிக்கும் எதிராகவும் வெளிப்படுத்துவார். மேலும், உலகின் எந்த மைதானத்திலும் சிக்ஸ் அடிக்கும் திறமை மற்றும் பலம் அவரிடம் உள்ளது. எனவே, சென்னை மைதானத்தில் ரசல் எளிதாக சிக்ஸர்களை பறக்கவிட்டு சென்னை அணியை மிரளவைப்பார் என்று பெர்குசன் கூறினார்.

Advertisement